ADDED : அக் 12, 2011 01:39 AM
ஈரோடு: சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டை கண்டித்து,
வீரப்பன்சத்திரத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில்
ஆர்ப்பாட்டம் நடந்தது.
உணவுப்பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு சட்டம் என்ற பெயரில் கொண்டு
வரப்பட்டுள்ள சட்டங்கள், சில்லறை மற்றும் நடுத்தர உணவுத்தொழிலில்
உள்ளவர்களை கடுமையாக பாதிக்கும். இந்நிறுவனங்களின் மொத்த விற்பனையைவிட,
சிறு தவறுக்குக்கூட ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் அபராதம், சிறை தண்டனை
என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும், என வலியுறுத்தினர்.மாவட்டத்தலைவர்
தேவராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சண்முகவேல் வரவேற்றார்.
கிருஷ்ணசாமி, மகாராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.


