இலங்கைக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
இலங்கைக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
இலங்கைக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை
ADDED : ஆக 12, 2011 08:54 AM
வாஷிங்டன்: விடுதலைப்புலிகளுக்கெதிரான இறுதி போரில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து நம்பகம் வாய்ந்த விசாரணை நடத்தப்படாவிட்டால், சர்வதேச விசாரணையை இலங்கை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட், இவ்விவகாரத்தில் இலங்கை அரசு நம்பகம் வாய்ந்த விசாரணையை மேற்கொள்ளும் என தாங்கள் நம்புவதாக தெரிவித்தார். இல்லாவிட்டால் அந்நாடு சர்வதேச விசாரணை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.


