Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திக்கு தெரியாமல் தவித்தோருக்கு உதவிய ஜமாத், ம.ம.க.,வினர்

திக்கு தெரியாமல் தவித்தோருக்கு உதவிய ஜமாத், ம.ம.க.,வினர்

திக்கு தெரியாமல் தவித்தோருக்கு உதவிய ஜமாத், ம.ம.க.,வினர்

திக்கு தெரியாமல் தவித்தோருக்கு உதவிய ஜமாத், ம.ம.க.,வினர்

ADDED : செப் 14, 2011 01:15 AM


Google News
ராமநாதபுரம் :பரமக்குடி கலவரத்தை தொடர்ந்து பஸ்கள் ரத்தால், ராமநாதபுரம் பஸ் ஸ்டாண்டில் திக்கு தெரியாமல் தவித்தவர்களுக்கு, ஜமாத், ம.ம.க.,வினரின் வீடுகளிலிருந்து உணவு வழங்கி உதவினர்.

பரமக்குடியில் கடந்த 11ம் தேதி ஏற்பட்ட திடீர் கலவரத்தால், மாவட்டம் முழுவதும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வெளியூர்களில் இருந்து திருமண நிகழ்ச்சிகளுக்கு வந்வர்கள் பலர் பஸ் ஸ்டாண்டில் தவித்தனர்.இதை அறிந்த ராமநாதபுரம் சின்னக்கடையை சேர்ந்த ஜமாத்தினர், மனித நேய மக்கள் கட்சியினர், சி.ஐ.டி.யு., அமைப்பினர், சின்னக்கடை பகுதி பள்ளிகளில் தங்க வைத்தனர். இந்த அமைப்புகளை சேர்ந்த ஒவ்வொரின் வீடுகளிலிருந்தும் சமைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டது. அடுத்த நாளும் அனைவருக்கும் உணவு வழங்கினர். தாசில்தார் சுந்தரமூர்த்தி ஏற்பாட்டின்படி நகராட்சி மூலம் குடிநீர், குளிப்பதற்கு வசதிகள் செய்து தரப்பட்டன. பின்னர் அரசு வாகனங்கள் மூலம் அருகேயுள்ள கிராமங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us