ADDED : செப் 08, 2011 01:29 AM
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே உள்ள மேலனிக்குழி யூனியன்
துவக்கப்பள்ளியில் பள்ளி நூற்றாண்டு விழா நடந்தது.தலைமையாசிரியை கிளாடிஸ்
பிரபாவதி தலைமை வகித்தார்.
பி.டி.ஐ., தலைவர் ரகு துணைத்தலைவர் அன்பழகன்
ஆகியோர் முன்னிலை வகித்தார். உதவி ஆசிரியர் சேரன் வரவேற்றார். ஜெயங்கொண்டம்
யூனியன் உதவி தொடக்க கல்வி அலுவலர் நடராஜன் வட்டார வளமைய மேற்பார்வையாளர்
கதிர்வேல், ஆசிரிய பயிற்றுனர் சரவணன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.முன்னாள்
மாணவரும் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி யூனியன் கவுன்சிலர் கந்தசாமி
250 மாணவியருக்கு இலவச சீருடை வழங்கினார்.


