பொதுக்கூட்ட மேடையில் பேசிய காங்.பிரமுகர் மரணம்
பொதுக்கூட்ட மேடையில் பேசிய காங்.பிரமுகர் மரணம்
பொதுக்கூட்ட மேடையில் பேசிய காங்.பிரமுகர் மரணம்
UPDATED : செப் 04, 2011 12:27 PM
ADDED : செப் 04, 2011 10:22 AM
கரூர்: மத்திய உள்துறை அமைச்சரின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட காங்.
பிரமுகர் ஒருவர், நன்றி உரையாற்றிய போது திடீர் மாரடைப்பால் இறந்தார். கரூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் கரூர், காமாட்சியம்மன் கோயில் பகுதியில் நடந்தது. இதில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. அழகிரி தலைமை தாங்கினார். பின்னர் கூட்டத்திற்கு நன்றி தெரிவித்து கரூர் மாவட்ட காங்கிரஸ் செயலாளர் பிச்சைமுத்து பேசினார். மேடையில் பேசிக்கொண்டிருந்த போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. பொதுக்கூட்ட மேடையிலேயே பிச்சைமுத்து உயிர்பிரிந்தது..


