Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/என் கட்சிக்காரர்களை லஞ்சம் வாங்க விடமாட்டேன்

என் கட்சிக்காரர்களை லஞ்சம் வாங்க விடமாட்டேன்

என் கட்சிக்காரர்களை லஞ்சம் வாங்க விடமாட்டேன்

என் கட்சிக்காரர்களை லஞ்சம் வாங்க விடமாட்டேன்

ADDED : அக் 12, 2011 01:10 AM


Google News
பண்ருட்டி : ''என் கட்சிக்காரர்கள் பொறுப்புக்கு வந்தால் லஞ்சம் வாங்க விடமாட்டேன்'' என தே.மு.

தி.க., நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பண்ருட்டியில் பேசினார். நகரமன்ற தலைவர் பதவிக்கு தே.மு.தி.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் அறிவொளி மற்றும் கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து பண்ருட்டி இந்திராகாந்தி சாலையில் கட்சி நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் நல்லாட்சி அமைந்திட தே.மு.தி.க., விற்கு ஒரு வாய்ப்பு அளியுங்கள். உங்கள் ஊருக்கு வருவதற்காகத்தான் எனது தொகுதியான விருத்தாசலத்திற்கு கூட போகாமல் வந்துள்ளேன். பண்ருட்டி நகராட்சியை தே.மு.தி.க., வை வெற்றி பெறச் செய்தால் மாதம் ஒரு முறை பொதுமக்கள் குறை கேட்டு பிரச்னை தீர்க்கப்படும். இரண்டு கட்சிகளும் மாறி மாறி பொற்கால ஆட்சி என கூறி வருகின்றனர். அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் தைரியமாக லஞ்சம் வாங்குகின்றனர். என் கட்சிக்காரர்கள் பொறுப்புக்கு வந்தால் லஞ்சம் வாங்க விடமாட்டேன். கடந்த தேர்தலில் உளவுத்துறை மூலம் சூட்கேஸ் வாங்கி விட்டேன் என வதந்தி பரப்பினர். நான் பணத்திற்கு அடிபணிய மாட்டேன். நகரமன்ற தலைவருக்கு போட்டியிடும் டாக்டர் அறிவொளிக்கு வாக்களிக்க வேண்டும். ரமணா படத்தில் ஊழல் பேர்வழிகளை பிடுங்கி வேர் அறுப்பது போல் ஊழல் பேர்வழிகளின் ஆணி வேரை பிடுங்கிடுவேன். இவ்வாறு தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us