Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/நீர்செரிவு மேம்பாட்டு திட்டத்தில் 14 திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

நீர்செரிவு மேம்பாட்டு திட்டத்தில் 14 திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

நீர்செரிவு மேம்பாட்டு திட்டத்தில் 14 திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

நீர்செரிவு மேம்பாட்டு திட்டத்தில் 14 திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு

ADDED : ஜூலை 25, 2011 10:28 PM


Google News

தேனி : நபார்டு வங்கி மூலம்,மாவட்டத்தில் 14 நீர் செரிவு திட்டங்களுக்காக 3 கோடியே 68 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் பழனிசாமி கூறியதாவது: ஜெயமங்கலம் பகுதியில் பாலம் கட்ட ஒரு கோடியே 12 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய், கம்பம் மேல்நிலைப்பள்ளி, ஹைவேவிஸ் உயர்நிலைப்பள்ளி, முருக்கோடை உயர்நிலைப்பள்ளியில் கட்டடம் கட்டுவதற்கு 2 கோடியே 24 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. பி.டி.ஆர்.கால்வாய் மறுசீரமைப்பு பணிக்கா 9 கோடியே 65 லட்சம் ரூபாய் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நீர் செரிவு மேம்பாட்டு திட்டத்தில் 14 திட்டங்களுக்கு 3 கோடியே 68 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் 2 கோடியே 63 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது,' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us