ADDED : ஆக 30, 2011 12:18 AM
ராமநாதபுரம்: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தடகளம், நீச்சல் போட்டிகள் ராமநாதபுரம் சேதுபதி விளையாட்டரங்கில் நடந்தது.
நிறைவு விழாவுக்கு மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விக்டர் பொன்ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் பால் சுதந்திரதாஸ் வரவேற்றார். தடகள சங்க செயலாளர் சேக் அப்துல்லா வாழ்த்தி பேசினார். நீச்சல் கழக செயலாளர் ரமேஷ், சேது ரமேஷ்பாபு பங்கேற்றனர்.


