/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அனைத்து மாவட்டங்களிலும்அருங்காட்சியகம்அனைத்து மாவட்டங்களிலும்அருங்காட்சியகம்
அனைத்து மாவட்டங்களிலும்அருங்காட்சியகம்
அனைத்து மாவட்டங்களிலும்அருங்காட்சியகம்
அனைத்து மாவட்டங்களிலும்அருங்காட்சியகம்
ADDED : செப் 08, 2011 02:51 AM
ஈரோடு: ''அனைத்து மாவட்டங்களிலும் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து அரசு பரிசீலனையில் உள்ளது,'' என, அருங்காட்சியகங்களின் ஆணையர் ஜவஹர் தெரிவித்தார்.ஈரோட்டில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:சென்னை அருங்காட்சியகத்தில் சிறுவர்களுக்காக, 75 லட்சம் ரூபாயில், '3டி' தியேட்டர் அமைக்கப்பட உள்ளது. மாநிலத்தில் சென்னை தவிர, 20 மாவட்டங்களில் அரசு அருங்காட்சிகம் உள்ளது. மற்ற மாவட்டங்களிலும் அருங்காட்சியகம் அமைப்பது குறித்து அரசு முடிவு செய்யும்.பிற மாவட்டங்களில் நிலங்களை தோண்டும்போது கிடைக்கும் சிலைகள், சென்னை அருங்காட்சியகத்தில் மொத்தமாக வைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக சிலைகளை காலம், ஏற்கனவே அதை ஒத்த சிலைகள் இல்லாமல் இருத்தல் போன்ற பல்வேறு விதிகளின்படி காட்சிப்படுத்தப்படும். ஏற்கனவே அதுபோன்ற சிலை இருந்தால், அவை பாதுகாப்பாக மட்டும் வைக்கப்படும். இருப்பினும், இவற்றை பிற மாவட்டங்களில் பார்வைக்கு வைப்பது குறித்து அரசுக்கு தெரிவிக்கப்படும்.
அருங்காட்சியகங்களை இலவசமாக பார்க்க அனுமதிக்க இயலாது. அரசின் விதிப்படி குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.


