/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/சின்னசேலம் பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிசின்னசேலம் பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி
சின்னசேலம் பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி
சின்னசேலம் பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி
சின்னசேலம் பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதி
ADDED : செப் 08, 2011 11:52 PM
சின்னசேலம் : சின்னசேலத்தில் கடந்த நான்கு நாட்களாக குடிநீர் சப்ளை இல்லாததால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சின்னசேலம் பேரூராட்சி பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதற்காக 6 லட்சம் லிட்டர் கொள்ளளவு உள்ள 2 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் அமைக் கப்பட்டுள்ளது. கூட்டு குடிநீர் திட்டப் பகுதியில் திருக்கோவிலூர் அடுத்த தாழனூரில் உள்ள டிரான்ஸ்பார்மர் கடந்த 4 நாட்களுக்கு முன் பழுதானது. இதனால் சின்னசேலத்திற்கு குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள் ளது. பொதுமக்கள் பணம் கொடுத்து குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.


