Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது

அனுமதியின்றி பட்டாசு தயாரித்தவர் கைது

ADDED : செப் 04, 2011 09:37 PM


Google News

திருவள்ளூர் : திருவள்ளூரில், அரசு அனுமதியின்றி வீட்டிற்குள் பட்டாசு தயாரித்தவரை, போலீசார் கைது செய்தனர்.

வீட்டில் இருந்து வெடி மருந்துகள் மற்றும் பட்டாசு தயாரிப்பதற்கான உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் நேதாஜி சாலையில் வசிப்பவர் சர்தார் சாகிப் மகன் அப்துல் முத்தலிப், 67. இவரது வீட்டில், பட்டாசுகள் தயாரிப்பதாகவும், எந்த நேரத்திலும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அப்பகுதி மக்கள், திருவள்ளூர் டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார், திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வீட்டுக்குள் பட்டாசு தயாரிக்கத் தேவையான வெடி மருந்து, அதற்கான மூலப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ஒரு லட்ச ரூபாய். அங்கு பட்டாசு தயாரித்துக் கொண்டிருந்திருந்த அப்துல் முத்தலிப்பையும் கைது செய்தனர். விசாரணையில் இவர் அரசு அனுமதியின்றி, உரிமம் பெறாமல், குடியிருப்புகளுக்கு இடையே பட்டாசு தயாரித்து வந்தது தெரிந்தது. திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us