Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு வசிக்கும் பகுதியிலேயே வேலை

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு வசிக்கும் பகுதியிலேயே வேலை

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு வசிக்கும் பகுதியிலேயே வேலை

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு வசிக்கும் பகுதியிலேயே வேலை

ADDED : அக் 07, 2011 10:59 PM


Google News

ராமநாதபுரம் : ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டசபை, லோக்சபா தேர்தலுக்கு தாலுகா அளவில், ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அந்தந்த பகுதியை சேர்ந்தவர்கள் நியமனம் செய்யப்படுவது வழக்கம். கடந்த சட்டசபை தேர்தலின்போது, பூத் சிலிப் கொடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கடைசி நேரத்தில், கட்சியினரே வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் அந்த நிலை வரக்கூடாது என்பதால், ஓட்டுச்சாவடி அலுவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநில தேர்தல் கமிஷன் முடிவெடுத்துள்ளது. இதற்காக உள்ளாட்சி தேர்தலையொட்டி ஏற்கனவே உள்ள ஓட்டுச்சாவடி அலுவலர்களுடன் சேர்த்து, ஊராட்சி எழுத்தர்களும், ஓட்டுச்சாவடி அலுவலர்களாக நியமனம் செய்யப்பட உள்ளனர்.பற்றாக்குறைக்கு ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களையும் பயன்படுத்த தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. சமூக சேவையில் ஆர்வம் கொண்டவர்களையும் இதில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us