Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மணல் கடத்தலை தடுக்க தனிப்படை சோதனை 4 லாரி பறிமுதல்; நான்கு பேர் அதிரடி கைது

மணல் கடத்தலை தடுக்க தனிப்படை சோதனை 4 லாரி பறிமுதல்; நான்கு பேர் அதிரடி கைது

மணல் கடத்தலை தடுக்க தனிப்படை சோதனை 4 லாரி பறிமுதல்; நான்கு பேர் அதிரடி கைது

மணல் கடத்தலை தடுக்க தனிப்படை சோதனை 4 லாரி பறிமுதல்; நான்கு பேர் அதிரடி கைது

ADDED : ஜூலை 31, 2011 01:05 AM


Google News

ஓசூர்: தமிழக எல்லையில் மணல் கடத்திய இடங்களில் ஏ.எஸ்.பி., தலைமையில் தனிப்படை போலீஸார் 'திடீர்' சோதனை நடத்தினர்.

19 வழக்குகள் பதிவு செய்து பத்து ஆயில் மோட்டார் இன்ஜின்கள், நான்கு லாரிகளை பறிமுதல் செய்தனர். நான்கு பேரை கைது செய்து தலைமறைவான 26 பேரை தேடி வருகின்றனர்.ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்று வழித்தடத்தில் உள்ள திருச்சிப்பள்ளி, தொரப்பள்ளி மற்றும் செம்பட்டி உள்ளிட்ட நல்ல மண்வளம் உள்ள பகுதியில் மணல் வெட்டியும், பில்டர் மணல் தயாரித்தும் கடந்த சில மாதமாக லாரிகள் மூலம் கர்நாடகா, ஆந்திராவுக்கு கடத்தப்பட்டது.இப்பகுதியில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடிசை அமைத்து தங்கியிருந்து மணல் கடத்தல் தொழிலில் நிரந்தரமாக ஈடுப்பட்டனர். அப்பகுதியில் கிடைக்கும் இயற்கையான மணலையும், அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மண்ணை வெட்டி எடுத்து ஆயில் மோட்டார், மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் பீச்சியடித்து 'பில்டர்' மணல் தயாரித்தும் கடத்தினர்.குறிப்பாக செம்பட்டி, தொரப்பள்ளியில் 'பில்டர்' மணல் தயாரிக்க கடத்தல் புள்ளிகள் நிரந்தரமாக ஃபோர் போட்டுள்ளனர். பகல், இரவு என சிப்ட் முறையில் தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்டு 24 மணி நேரமும் தமிழக எல்லையோர தென்பெண்ணை ஆற்று மணல் வெளிமாநிலங்களுக்கு கடத்தப்பட்டதால் மண் வளத்திற்கு ஆபத்து ஏற்பட்டது. இது குறித்து கடந்த 24ம் தேதி 'காலைக்கதிர்' நாளிதழில் செய்தி வெளியானது.எஸ்.பி., கண்ணன் உத்தரவின் பேரில் மணல் கடத்தலை தடுக்கவும், மணல் கடத்தல் புள்ளிகளை பிடிக்கவும் ஏ.எஸ்.பி., ரம்யா பாரதி தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் கண்ணப்பன், ஹட்கோ இன்ஸ்பெக்டர் சரவணன், சிப்காட் இன்ஸ்பெக்டர் தனிக்காசலம் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.இந்த தனிப்படை போலீஸார் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாருடன் மூன்று பிரிவாக நேற்று முன்தினம் மணல் கடத்தல் நடந்த திருச்சிப்பள்ளி, தொரப்பள்ளி மற்றும் செம்பட்டி பகுதியில் திடீர் சோதனை நடத்தி மணல் கடத்தலில் ஈடுப்பட்டவர்களை சுற்றி வளைத்தனர்.போலீஸாரை கண்டதும் அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். லாரிகளில் மண் கடத்தி சென்ற தொரப்பள்ளியை சேர்ந்த மணி (26), மற்றொரு மணி (24), ராமர் (26), ஓசூர் வானியர் தெருவை சேர்ந்த அசோக்குமார் (25) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

பில்டர் மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட பத்து ஆயில் மோட்டார் இன்ஜின்கள், நான்கு லாரிகளை பறிமுதல் செய்தனர். மணல் கடத்தல் புள்ளிகள் மீது ஓசூர் டவுன், ஹட்கோ, பேரிகை மற்றும் பாகலூர் போலீஸ் ஸ்டேஷன்களில் 19 வழக்குகள் பதிவு செய்து தலைமறைவான 26 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.வெளிமாநிலங்களுக்கு மணல் கடத்தலை தடுக்க போலீஸார் கர்நாடகா, ஆந்திரா வழித்தடங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டும், வாகனச்சோதனையிலும் ஈடுப்பட்டுள்ளதால் மணல் கடத்தல்காரர்கள் பெரும் கலக்கம் அடைந்துள்ளனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us