ADDED : செப் 08, 2011 10:23 PM
அன்னூர் : அன்னூரில் வரும் ஞாயிற்றுக்கிழமை இலவச இந்தி பயிற்சி வகுப்பு
துவங்குகிறது.அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில், கிராமப்புற
மாணவர்களுக்காக, கடந்த நான்கு ஆண்டுகளாக இலவச இந்தி பயிற்சி வகுப்பு
நடக்கிறது.
இந்த ஆண்டுக்கான பயிற்சி வகுப்பு வரும் 11ம் தேதி
துவங்குகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை வகுப்பு நடக்கும். விபரங்களுக்கு 98420
44701, 99420 90155 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம், என பரிஷத்
நிர்வாகிகள் தெரிவித்தனர்.


