Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கே.டி.சி நகரில் அடிக்கடி விபத்துகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கே.டி.சி நகரில் அடிக்கடி விபத்துகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கே.டி.சி நகரில் அடிக்கடி விபத்துகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

கே.டி.சி நகரில் அடிக்கடி விபத்துகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

ADDED : ஆக 30, 2011 12:07 AM


Google News

திருநெல்வேலி : கே.டி.சி நகர் பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய ராகுல் காந்தி ரத்த தான கழக நிறுவன தலைவர் பிரம்மா அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் கே.டி.சி நகர் டெப்போக்கு எதிரில் 6 ரோடுகள் சந்திக்கிறது. நெல்லை - தூத்துக்குடி 4 வழி சாலையில் வாகனங்கள் அதிக வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு உயிர் பலிகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் அதிக விபத்துகள் நடக்கிறது. கே.டி.சி நகர் பகுதிகளில் பள்ளிகள் உள்ளதால் பள்ளி மாணவ, மாணவிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 3 மாதங்களாக இப்பகுதியில் சர்வீஸ் ரோட்டின் வட பகுதியில் பாதாள சாக்கடை தோண்டும் பணி மந்தமாக செயல்படுவதால் அடிக்கடி விபத்துக்களுக்கு வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, கே.டி.சி நகர் பகுதியில் நான்கு வழி சாலையில் வாகனங்களில் வேகத்தை கட்டுப்படுத்த சாலையின் இருபுறமும் பேரிகார்டுகள், வேகத் தடைகள், டிராபிக் சிக்னல்கள், சுரங்க பாதை போன்றவை அமைக்க வேண்டும். போக்குவரத்தை சீர் செய்ய காவலர் பணியமர்த்த வேண்டும். அதிகமாக விபத்துகள் நடப்பதால் கே.டி.சி நகர் பகுதியில் அவசர ஆம்புலன்ஸ் வசதியையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us