ADDED : ஆக 18, 2011 12:48 AM
செஞ்சி : செஞ்சி ஒன்றியம் சோ.குப்பம் ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபா கூட்டம் நடந்தது.
ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய பற்றாளர் கந்தசாமி முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் ஸ்ரீராம், மக்கள் நலப்பணியாளர் பெருமாள் மற்றும் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் வறுமை ஒழிப்பு திட்டத்தின் தன்மை குறித்து மக்களுக்கு எடுத் துரைத்தல், சுயஉதவிக் குழுவை சேர்ந்தவர்கள் அதிக வட்டி கடன் சுமை யிலிருந்து விடுபட விழிப் புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


