ADDED : அக் 09, 2011 12:28 AM
புதுச்சேரி : காங்., வேட்பாளர் ஆறுமுகம், காந்தி நகரில் நேற்று ஓட்டு சேகரித்தார்.
இந்திரா நகர் தொகுதி இடைத் தேர்தலையொட்டி, காங்., வேட்பாளர் ஆறுமுகம் நேற்று காந்தி நகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். காங்., தலைவர் ஏ.வி. சுப்ரமணியன், முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ., ஜெயமூர்த்தி, மகிளா காங்., துணைத் தலைவி சந்திரிகா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு ஓட்டு சேகரித்தனர்.


