ADDED : செப் 08, 2011 05:22 PM

கோவை: கோவை ரேஸ்கோர்ஸ் ஸ்டேட் பேங்க் கிளை சார்பில், மாநகராட்சிப் பள்ளிக்கு மின்விசிறிகள் இலவசமாக வழங்கப்பட்டன.
'ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா', பேங்க் பணியுடன் சமூகப் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. கோவையில் இந்த வங்கியின் ரேஸ்கோர்ஸ் கிளை சார்பில், ராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு 10 மின் விசிறிகள், நன்கொடையாக வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் ராமதாசிடம், இவற்றை ரேஸ்கோர்ஸ் கிளை மேலாளர் உதயகுமார், காசாளர் இக்பால் ஆகியோர் வழங்கினர். ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இவற்றை வழங்கியதாக கிளை மேலாளர் தெரிவித்தார்.


