Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/டில்லி ஷீரடி சாய்பாபா ‌கோயிலுக்கு பாதுகாப்பு

டில்லி ஷீரடி சாய்பாபா ‌கோயிலுக்கு பாதுகாப்பு

டில்லி ஷீரடி சாய்பாபா ‌கோயிலுக்கு பாதுகாப்பு

டில்லி ஷீரடி சாய்பாபா ‌கோயிலுக்கு பாதுகாப்பு

ADDED : செப் 08, 2011 04:34 PM


Google News
புதுடில்லி:டில்லியில் உள்ள ஷீரடிசாய்பாபா கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைதொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. டில்லி ஐகோர்ட் வாசலில் நேற்று நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் எதிரொலியாக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் டில்லி உள்ள ஷீரடி சாய்பாபா ‌கோயிலுக்கு ‌வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்குப்பின்‌னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.மேலும் செல்போன்,கேமிரா உள்ளிட்டவைகளை ‌கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஷீரடி கோயில் அறக்கட்டளை நிர்வாகிகள் கூறுகையில், இக்‌கோயிலில் ஏற்கனவே கண்காணிப்பு கேமிராக்கம் பொருத்தப்பட்டு கோயிலுக்குள் வரும் பக்தர்களின் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனினும் நேற்று நடந்த சம்பவம் காரணமாக பாதுகாப்பினை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us