Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/திருமால்பூர் - அரக்கோணம் ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி

திருமால்பூர் - அரக்கோணம் ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி

திருமால்பூர் - அரக்கோணம் ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி

திருமால்பூர் - அரக்கோணம் ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி

ADDED : அக் 01, 2011 11:04 PM


Google News

காஞ்சிபுரம் : 'திருமால்பூர் - அரக்கோணம் ரயில் பாதையில், 300 மீட்டர் நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததும், ரயில் பாதையை மின்மயமாக்கும் பணி துவக்கப்படும்' என, தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக்கிஷன் தெரிவித்தார்.காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்திற்கும், பழைய ரயில் நிலையத்திற்கும் இடையே, கூடுதலாக ஒரு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக்கிஷன், சென்னை கோட்ட மேலாளர் அனந்தராமன் ஆகியோர், காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்தை ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பின் தீபக்கிஷன் நிருபர்களிடம் கூறியதாவது:காஞ்சிபுரத்திலிருந்து, சென்னைக்கு கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும். காஞ்சிபுரத்திலிருந்து சென்னை செல்லும் ரயில்களில், கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ரயில் பயணிகள் மனு கொடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.திருமால்பூர் - அரக்கோணம் ரயில் பாதை, இந்திய கடற்படை தளம் அருகே செல்கிறது. எனவே, அந்த ரயில் பாதையை மின்மயமாக்க, பாதுகாப்புப் படையினர் ஆட்சேபம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து மாற்றுப்பாதை கண்டறியப்பட்டது. இப்பாதை 7.5 கி.மீ., தூரம் சுற்றி செல்லும். இப்பாதையில் 300 மீட்டர் தூரத்திற்கு, நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது. இப்பணி முடிந்ததும் ரயில்வே பணிகள் துவக்கப்படும்.இவ்வாறு தீபக்கிஷன் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us