ADDED : செப் 08, 2011 10:24 PM
சூலூர் : சூலூரில் நடந்த இருவேறு விபத்துகளில் இருவர் உயிரிழந்தனர்.சூலூரை
சேர்ந்தவர் ராஜசேகர் (45); பெயிண்டர்.
இவர் சம்பவத்தன்று திருச்சி ரோட்டில்
அரசு மருத்துவமனை அருகே நடந்து சென்றார். அப்போது, அவ்வழியே வந்த வேன்
மோதியது. கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி
இறந்தார். நீலம்பூர் டேங்க் வீதியை சேர்ந்தவர் முருகையன் (70). நேற்று
முன்தினம் நண்பர் ராமசாமியுடன் அவிநாசி ரோட்டில் நடந்து சென் றார்.
அவ்வழியே வேகமாக வந்த டெம்போ முருகையன் மீது மோதியது. பலத்த காய மடைந்தவர்
சம்பவ இடத்திலேயே பலியானார். இரு விபத்துகள் குறித்து, சூலூர் போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


