Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சேலம்/மின்சாரம் தாக்கி இரு பெண்கள் பலி: மழையால் ஏற்பட்ட சோகம்

மின்சாரம் தாக்கி இரு பெண்கள் பலி: மழையால் ஏற்பட்ட சோகம்

மின்சாரம் தாக்கி இரு பெண்கள் பலி: மழையால் ஏற்பட்ட சோகம்

மின்சாரம் தாக்கி இரு பெண்கள் பலி: மழையால் ஏற்பட்ட சோகம்

ADDED : ஆக 19, 2011 02:22 AM


Google News
இடைப்பாடி: இடைப்பாடி அருகே மின்சாரம் தாக்கி இரு பெண்கள் பலியாகினர். இதுகுறித்து சங்ககிரி ஆர்.டி.ஓ., தேவூர் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். சங்ககிரி தாலுகா, ஒக்கிலிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வரன்(55). இவருக்கு, பாப்பாத்தி(50) என்ற மனைவியும், ஆனந்தன்(28), கணேசன்(25) என, இரண்டு மகன்கள் உள்ளனர். ஒக்கிலிப்பட்டியில், மாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகிறது. அதனால், நேற்று மாலை ஈஸ்வரன், அவரது மகன்கள் ஆனந்தன், கணேசன் ஆகிய மூவரும் கோவிலுக்கு சென்று விட்டனர். வீட்டில், பாப்பாத்தி, மருமகள் மணிமேகலா (25) ஆகிய இருவர் மட்டும் இருந்துள்ளனர். இந்நிலையில், ஒக்கிலிப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால், ஈஸ்வரன் வீட்டுக்குச் செல்லும் மின்கம்பி மீது தென்னை மரம் விழுந்துள்ளது. மின்கம்பியில் இருந்த மின்சாரம், வீட்டில் இருந்த இரும்பு கம்பி, லைட் போன்றவற்றின் மீது பாய்ந்துள்ளது. இதை அறியாத பாப்பாத்தி, துணி காய வைக்கும் கம்பியில் இருந்த புடவையை எடுத்தபோது, அவரை மின்சாரம் தாக்கியுள்ளது. பாப்பாத்தியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டுக்குள் இருந்த மணிமேகலா ஓடிவந்து மாமியாரை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.

அதில், மாமியார், மருமகள் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில், சம்பவ இடத்திலேயே பலியாகினர். தகவலறிந்த சங்ககிரி இன்ஸ்பெக்டர் ஆரோக்யராஜ், தேவூர் எஸ்.ஐ., சேரநாதன் ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மணிமேகலாவுக்கு திருமணம் நடந்து ஐந்து ஆண்டுகள் ஆனதால், சங்ககிரி ஆர்.டி.ஓ., சிவராசு விசாரணை நடத்தி வருகிறார்.இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us