/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாசனநீரை முறைகேடாக எடுப்பவர்களுக்கு எச்சரிக்கை : "ஐவர் குழு' அமைத்து கண்காணிக்க முடிவுபாசனநீரை முறைகேடாக எடுப்பவர்களுக்கு எச்சரிக்கை : "ஐவர் குழு' அமைத்து கண்காணிக்க முடிவு
பாசனநீரை முறைகேடாக எடுப்பவர்களுக்கு எச்சரிக்கை : "ஐவர் குழு' அமைத்து கண்காணிக்க முடிவு
பாசனநீரை முறைகேடாக எடுப்பவர்களுக்கு எச்சரிக்கை : "ஐவர் குழு' அமைத்து கண்காணிக்க முடிவு
பாசனநீரை முறைகேடாக எடுப்பவர்களுக்கு எச்சரிக்கை : "ஐவர் குழு' அமைத்து கண்காணிக்க முடிவு
பொள்ளாச்சி : திருமூர்த்தி அணையில் இருந்து நான்காம் மண்டல பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரை, முறைகேடாக எடுப்பவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க 'ஐவர் குழு' அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திட்டக்குழு நிர்வாகிகள் பேசியதாவது:பாசனத்திற்கு தண்ணீர் திறந்ததும், செப்., மாதம் மட்டும் மழை இருக்காது. அக்., மாதத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி விடும். அதனால், பாசன தண்ணீர் முறைகேடாக எடுக்க வாய்ப்பு குறைவு. ஜன., பிப்., மாதம் முதல் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கும் போது, வறட்சியான காலநிலை இருக்கும். அப்போது, பாசன தண்ணீர் முறைகேடாக எடுக்க அதிக வாய்ப்புள்ளது. பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீரை முறைகேடாக எடுப்பதை தடுக்க, பி.ஏ.பி., வருவாய்த்துறை, போலீஸ், மின்வாரியம் மற்றும் பாசன சங்க தலைவர்களை கொண்டு 'ஐவர் குழு' அமைக்க வேண்டும். இந்த குழு இரவு பகலாக கண்காணித்து, முறைகேட்டை தடுக்க வேண்டும்.தவறு செய்பவர்களை கையும் களவுமாக பிடித்ததும், போலீஸ் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசன கிணற்றிலுள்ள மின் இணைப்பை துண்டிக்க வேண்டும். அப்போது தான் முறைகேடாக தண்ணீர் எடுப்பதை தடுக்க முடியும். பாசன சங்க தலைவர்களும் பாரபட்சமின்றி செயல்படவேண்டும் என்றனர்.


