ADDED : செப் 07, 2011 12:23 AM
புதுச்சேரி : செக் மோசடி செய்து, பொறியாளரின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்தது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகரில் வசிப்பவர் பொறியாளர் குகன், 33; இவர் சென்னையிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், லாஸ்பேட்டையை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ராஜா என்பவருக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் இருந்துள்ளது.இந்நிலையில் குகனுக்கு தெரியாமல், அவருடைய காசோலையைப் பயன்படுத்தி வங்கியில் இருந்து 5 லட்சம் ரூபாய் எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் குகன் வழக்கு தொடர்ந்தார். அதில் ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டது. முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


