Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/செக் மோசடி: போலீசார் வழக்கு

செக் மோசடி: போலீசார் வழக்கு

செக் மோசடி: போலீசார் வழக்கு

செக் மோசடி: போலீசார் வழக்கு

ADDED : செப் 07, 2011 12:23 AM


Google News

புதுச்சேரி : செக் மோசடி செய்து, பொறியாளரின் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்தது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

முத்தியால்பேட்டை விஸ்வநாதன் நகரில் வசிப்பவர் பொறியாளர் குகன், 33; இவர் சென்னையிலுள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், லாஸ்பேட்டையை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் ராஜா என்பவருக்கும் இடையே கொடுக்கல், வாங்கல் இருந்துள்ளது.இந்நிலையில் குகனுக்கு தெரியாமல், அவருடைய காசோலையைப் பயன்படுத்தி வங்கியில் இருந்து 5 லட்சம் ரூபாய் எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் குகன் வழக்கு தொடர்ந்தார். அதில் ராஜா மீது வழக்குப் பதிவு செய்ய கோர்ட் உத்தரவிட்டது. முத்தியால்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us