/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வரி விதிப்பால் குழப்பம்: வர்த்தக சங்கம் கோரிக்கைவரி விதிப்பால் குழப்பம்: வர்த்தக சங்கம் கோரிக்கை
வரி விதிப்பால் குழப்பம்: வர்த்தக சங்கம் கோரிக்கை
வரி விதிப்பால் குழப்பம்: வர்த்தக சங்கம் கோரிக்கை
வரி விதிப்பால் குழப்பம்: வர்த்தக சங்கம் கோரிக்கை
ADDED : ஜூலை 14, 2011 11:40 PM
திண்டுக்கல் : சமீபத்திய வரிவிதிப்பால், வருமான வரி செலுத்துவதில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக, மாவட்ட தொழில் வர்த்தக சங்கத்தினர் முதல் வருக்கு மனு அனுப்பியுள்ளனர்.
இதில் கூறப்பட்டுள்ளதாவது: அரசின் வருவாயை பெருக்குவதற்காக, பல்வேறு பொருட்களின் மீதான வரிவிகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுவரை வரிவிலக்கு அளிக்கப்பட்டிருந்த ஜவுளிப்பொருட்களுக்கு, தற்போது ஆறு சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. சமையல் எண்ணெய் விற்பனையாளர்களுக்கான வரி விலக்கு வரம்பு, 500 கோடி ரூபாயில் இருந்து ஐந்து கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. எலெக்ட்ரானிக், மொபைல் சாதனங்கள் மீதான வரியும் அதிகரித்துள்ளது.
இதன் மூலம் ஏற்படும் விலை உயர்வால், நுகர்வோர் பாதிப்படைவர். மேலும் வரிவிதிப்பு மாற்றங்கள் உடனடியாக அமல்படுத்தப்பட்டதால், மதிப்பு கூட்டு வரிச் சட்டத்தில் பதிவு பெற்ற வணிகர்களுக்கு, வரிவிதிப்பு அமலாக்கம், ரிட்டன் தாக்கல், வசூலித்தல் முறையில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்பிரச்னையை சமாளிக்க அரசு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


