Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/உலகம்/ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இந்தியர்கள் துபாயில் தற்கொலை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இந்தியர்கள் துபாயில் தற்கொலை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இந்தியர்கள் துபாயில் தற்கொலை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று இந்தியர்கள் துபாயில் தற்கொலை

ADDED : செப் 04, 2011 01:59 PM


Google News
துபாய்: துபாயில் கடன்தொல்லையால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன், மனைவி, மகள் என மூன்று இந்தியர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ஐக்கிய அரபு எமிரேட் நாடான துபாயில் உள்ள ராஸ்-அல்-‌கெய்மாஹ் நகரில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தூற்நாற்றம் வீசுவதாக பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்கள் போலீசில் புகார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது 44 வயது மதிக்கத்தக்க ஒருவர் அவரது மனைவி, 8 வயது மகள் ஆகியோர் தூக்குபோட்டு தற்‌கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மேலும் பக்கத்துவீட்டில் குடியிருப்பவர்கள் கூறிய தகவலின்படி இறந்தவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளனர். சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி உடல்களை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலைக்கு கடன் தொல்லை காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. தற்கொலை செய்தவர்கள் குறித்த பெயர் விவரத்தினை போலீசார் வெளியிடவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us