புதிய துறையை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது : அமைச்சர் வீரப்ப மொய்லி பேட்டி
புதிய துறையை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது : அமைச்சர் வீரப்ப மொய்லி பேட்டி
புதிய துறையை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது : அமைச்சர் வீரப்ப மொய்லி பேட்டி

புதுடில்லி : ''கம்பெனி விவகாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது; பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்., தலைவர் சோனியாவுக்கு நன்றி,'' என, அமைச்சர் வீரப்ப மொய்லி கூறினார்.
இதனால் அதிருப்தி அடைந்த வீரப்ப மொய்லி, 'சுயநலவாதிகள் சிலரின் விருப்பம் காரணமாக, தனக்கு இலாகா மாறியுள்ளது' என, கருத்து கூறினார். இது, பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், கம்பெனிகள் விவகாரத் துறை அமைச்சகப் பொறுப்பை நேற்று ஏற்றுக்கொண்ட, அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியதாவது:
கம்பெனி விவகாரத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக, பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்., தலைவர் சோனியாவுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் ஒரு சீர்திருத்தவாதி என்பதும், எந்த ஒன்றிற்கும் மாற்றுத் திட்டம் வைத்திருப்பேன் என்பதும் அவர்களுக்குத் தெரியும். எனது திறமை மேல் நம்பிக்கை வைத்து, கம்பெனி விவகாரத் துறையை எனக்கு ஒதுக்கியுள்ளனர்.
நேற்று என்பது முடிந்து போன ஒன்று. நேற்றைக்கு என்ன சொன்னேன் என்பது முக்கியமில்லை. இன்று நான் கம்பெனி விவகாரத்துறை அமைச்சர். சட்டத் துறையை நிர்வகித்தது போல், புதிய துறையையும் சரியான முறையில் நிர்வகிப்பேன். '2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை முழுவதுமாக புரிந்து கொள்ள எனக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது.
அது பற்றி பரிசீலிக்கும் முன், நான் எதையும் தெரிவிக்க இயலாது. அதுபோல், இதர அமைச்சகங்களில் நடந்த தவறுகளுக்கு, நான் பொறுப்பேற்க முடியாது. இவ்வாறு வீரப்ப மொய்லி கூறினார்.
மிலிந்த் தியோரா பொறுப்பேற்பு: இதேபோல், தகவல் தொடர்புத்துறை இணையமைச்சராக நேற்று முன்தினம் பதவியேற்ற மிலிந்த் தியோராவும் நேற்று தன் அமைச்சக பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.
அவர் கூறுகையில், ''கிராமப்புறங்களில், தொலைபேசி சேவையை அதிகப்படுத்துவதே என் முதன்மையான நோக்கம். நியாயமான விலையில் வழங்கப்படும் இந்த சேவை மூலமாக, அரசுக்கு உரிய வருவாய் ஏற்படுத்தித் தரப்படும்,'' என்றார்.


