Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/அனுமதியற்ற கட்டுமான பணிகள் நிறுத்தம்

அனுமதியற்ற கட்டுமான பணிகள் நிறுத்தம்

அனுமதியற்ற கட்டுமான பணிகள் நிறுத்தம்

அனுமதியற்ற கட்டுமான பணிகள் நிறுத்தம்

ADDED : ஜூலை 15, 2011 10:07 PM


Google News

மூணாறு : மூணாறு அருகே லெட்சுமி எஸ்டேட் பகுதியில் வனத்தினுள் ரிசார்ட்டுக்காக அனுமதி இன்றி நடந்து வந்த கட்டுமான பணிகளை வருவாய் துறையினர் தடுத்து நிறுத்தினர்.

மூணாறில் சுற்றுலா வளர்ச்சி மேம்பாட்டிற்காக, 'மாஸ்டர் பிளான்' தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தரை தளம் தவிர இரண்டு நிலை கட்டடம் கட்ட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு வருவாய் துறையினரிடம், முறையாக அனுமதி பெற வேண்டும்.இவற்றை மீறி பள்ளிவாசல் ஊராட்சியில் கட்டப்பட்டு வந்த நான்கு ரிசார்ட்டுகளின் கட்டுமான பணிகள் நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் மூணாறு அருகே லெட்சுமி எஸ்டேட் பகுதியில் வனத்தினுள் அனுமதி இன்றி கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. சப் கலெக்டர் ராஜமாணிக்கம் நேற்று முன்தினம் அப்பகுதியில் ஆய்வு நடத்தினார். அங்கு ரிசார்ட்டிற்காக நான்கு நிலை கட்டடத்தின் கட்டுமான பணிகள் நடந்ததால்,வருவாய் துறை அதிகாரிகள் கட்டுமான பணிகளை நிறுத்தி நோட்டீஸ் வழங்கினர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us