/உள்ளூர் செய்திகள்/கரூர்/பா.ஜ., கூட்டத்தில் தீர்மானம் சட்ட விரோதமாக மணல் அள்ளினால் போராட்டம்பா.ஜ., கூட்டத்தில் தீர்மானம் சட்ட விரோதமாக மணல் அள்ளினால் போராட்டம்
பா.ஜ., கூட்டத்தில் தீர்மானம் சட்ட விரோதமாக மணல் அள்ளினால் போராட்டம்
பா.ஜ., கூட்டத்தில் தீர்மானம் சட்ட விரோதமாக மணல் அள்ளினால் போராட்டம்
பா.ஜ., கூட்டத்தில் தீர்மானம் சட்ட விரோதமாக மணல் அள்ளினால் போராட்டம்
ADDED : ஆக 27, 2011 11:55 PM
வேலாயுதம்பாளையம்: காவிரியாற்று பாலம் அருகே சட்ட விரோதமாக மணல் அள்ளுவதை கண்டித்து தொடர் போராட்டம் நடத்த கரூர் ஒன்றிய பா.ஜ., நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.
கரூர் ஒன்றிய பா.ஜ., கட்சி பொறுப்பாளர்கள் கூட்டம் ஒன்றிய பொருப்பாளர் சுரேஷ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கரூர் ஒன்றிய பகுதிகளில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கையை வரும் 15 ம் தேதி வரை நடத்துவது, காவிரியாற்று பாலம் அருகில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதை கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தவது. சர்க்கரை ஆலை மற்றும் காகித ஆலை கழிவு நீரை பாசன வாய்காலில் கலக்க விடாமல் தடுத்து, விவசாய நிலங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட துணை தலைவர் சிவா, மாநில மகளிர் அணி செயலாளர் கஜிதா மாவட்ட சிறு தொழில் கோட்ட பொறுப்பாளர் கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லோகநாதன், புகளூர் அமைப்பாளர் குணா, துணை அமைப்பாளர் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.


