/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ஆசிரியர்களுக்கு பணி இட மாறுதல் கலந்தாய்வுஆசிரியர்களுக்கு பணி இட மாறுதல் கலந்தாய்வு
ஆசிரியர்களுக்கு பணி இட மாறுதல் கலந்தாய்வு
ஆசிரியர்களுக்கு பணி இட மாறுதல் கலந்தாய்வு
ஆசிரியர்களுக்கு பணி இட மாறுதல் கலந்தாய்வு
ADDED : செப் 16, 2011 12:05 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த தொடக்கல்வி ஆசிரியர்களுக்கான மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு இன்று (செப்.,16) துவங்கி 20ம் தேதி வரை நடக்கிறது.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் மனோகரன் வெளியிட்ட அறிக்கை: அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்கள் ஆகிய ஆசிரியர்களுக்கு மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு கிருஷ்ணகிரி ஆர்.சி.,பாத்திமா நிதி உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் நடக்கிறது. இன்று காலை நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் மற்றும் பதவி உயர்வும், பிற்பகல் பட்டதாரி, தமிழ் ஆசிரியர்களுக்கு மாறுதல் மற்றும் பதவி உயர்வும், 17ம்தேதி காலை தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு மாறுதல் மற்றும் பதவி உயர்வும், மாலை உயர்நிலைப்பள்ளிக்கு ஈர்த்துக்கொள்ளப்படாத இடைநிலை ஆசிரியர்களுக்கு மாறுதலுக்கான கலந்தாய்வு நடக்கிறது. வரும் 19ம் தேதி காலை இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள் மாறுதல், மாலை இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல் ஆகியவற்றுக்கான கலந்தாய்வு நடக்கிறது. 20ம் தேதி காலை இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாறுதல், மாலை பட்டதாரி ஆசிரியர்கள் மாவட்ட விட்டு மாவட்டம் மாறுதலுக்கான கலந்தாய்வு நடக்கிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


