ADDED : செப் 08, 2011 01:53 AM
கோவை : டில்லி குண்டு வெடிப்பு எதிரொலியாக கோவையில் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டனர்.
டில்லி ஐகோர்ட்டில் நடந்த குண்டு வெடிப்பில் 11 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கோவை போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி உத்தரவில் பொதுமக்கள் அதிகம் கூடும் கோவை ரயில்வே ஸ்டேஷன், விமான நிலையம், உக்கடம், சிங்காநல்லூர், காந்திபுரம், சா#பாபாகாலனி பஸ் ஸ்டாண்ட்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது. மாநகர் எல்லையில் உள்ள 11 செக்போஸ்ட் வழியாக வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே நகருக்குள் அனுமதிக்கப்பட்டன. கேரளா மற்றும் பொள்ளாச்சி ரோடு வழியாக வரும் வாகனங்கள் ஆத்துப்பாலம் டோல்கேட் பகுதியில் சோதனையிடப்பட்டன.


