மீண்டும் அமெரிக்காவை தாக்க திட்டம்
மீண்டும் அமெரிக்காவை தாக்க திட்டம்
மீண்டும் அமெரிக்காவை தாக்க திட்டம்
ADDED : ஜூலை 15, 2011 10:58 AM
வாஷிங்டன்: இரட்டை கோபுர தாக்குதல் நினைவு தினத்தின் போது, மீண்டும் அமெரிக்காவை தாக்க அல் குவைதா திட்டமிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அல் குவைதா அமைப்பின் தலைவர் ஒசாமா பில்லேடன் கடந்த மே மாதம் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டார். இந்நிலையில், தான் கொல்லப்படுவதற்கு முன்பாக, அல்குவைதா அமைப்பின் தலைவர்களுடன் பேசிய ஒசாமா, இரட்டை கோபுர தாக்குதலில் 10ம் நினைவு தினத்தில் மீண்டும் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியதாக வால் ஸ்டிரீட் ஜர்னல் தெரிவித்துள்ளது. எனினும் இது ஆலோசனை அளவிலேயே இருந்ததாகவும், அதற்குள் ஒசாமா கொல்லப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


