/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/திண்டிவனம் சேர்மன் பதவிக்கு தி.மு.க.,வில் 9 பேர் போட்டிதிண்டிவனம் சேர்மன் பதவிக்கு தி.மு.க.,வில் 9 பேர் போட்டி
திண்டிவனம் சேர்மன் பதவிக்கு தி.மு.க.,வில் 9 பேர் போட்டி
திண்டிவனம் சேர்மன் பதவிக்கு தி.மு.க.,வில் 9 பேர் போட்டி
திண்டிவனம் சேர்மன் பதவிக்கு தி.மு.க.,வில் 9 பேர் போட்டி
ADDED : செப் 07, 2011 10:16 PM
திண்டிவனம்:உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிடுவோரிடம்
நேற்று திண்டிவனத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டது.தி.மு.க., தலைமை
தீர்மான குழு செயலாளர் முன் னாள் எம்.எல்.ஏ., குழந்தை தமிழரசன், தலைமைக்
கழக பேச்சாளர் கிருஷ் ணமூர்த்தி தலைமை தாங்கினர். மாவட்ட அவைத் தலை வர்
மஸ்தான், துணை செய லாளர் அசோகன், முன் னாள் சேர்மன் ராதாமணி, முன்னாள்
எம்.எல். ஏ.,க் கள் உதயசூரியன், சேதுநாதன், நகர செயலாளர் கபிலன்
உடனிருந்தனர்.
திண்டிவனம் சேர்மன் பூபாலன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் வசந்தா,
இலக்கிய அணி துணை செயலாளர் மூர்த்தி, மாவட்ட பிரதிநிதி கவுன்சிலர்
சின்னதுரை, முன்னாள் கவுன்சிலர் மதி உட்பட 9 பேர் நகர மன்ற சேர்மன்
பதவிக்கு விருப்ப மனு செய்தனர். அதேபோல் நகரமன்ற கவுன்சிலர் பதவிக்கு 121
பேர் மனு அளித்துள்ளனர்.


