Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

கேரளாவுக்கு கடத்திய ரேஷன் அரிசி பறிமுதல்

ADDED : செப் 07, 2011 12:26 AM


Google News
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்பட்ட 300 கிலோ ரேஷன் அரிசியும், மூன்று மொபட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு இருசக்கர வாகனங்களில் ரேஷன் அரிசி கடத்துவது அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பொதுவினியோக திட்டத்தில் இலவசமாக வழங்கும் அரிசிக்கு கேரளாவில் கிலோவுக்கு 10 ரூபாய்க்கு மேல் விலை கிடைப்பதால், இடைத்தரகர்கள் மூலம் கடத்தல் நடக்கிறது.பொள்ளாச்சியில் ரேஷன் கடை ஊழியர்கள் துணையுடனும், பொதுமக்களிடம் இருந்து விலை கொடுத்து ரேஷன் அரிசி வாங்கி, கேரளாவுக்கு கடத்துகின்றனர். விவசாய உர பேக்கிங்குகளில் ரேஷன் அரிசியை கொண்டு செல்கின்றனர். செமணாம்பதி வழித்தடத்தில் மொபட் மூலம் ரேஷன் அரிசி கடத்துவதாக பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் துறை தனித்தாசில்தார் சக்திவேலுக்கு தகவல் கிடைத்தது. தாசில்தார் தலைமையில் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். செமணாம்பதி பங்களா மேடு பகுதியில் அதிகாரிகளை பார்த்ததும், மொபட்டில் வந்தவர்கள் மூட்டைகளோடு அப்படியே விட்டு விட்டு ஓட்டம் பிடித்தனர். மூன்று மொபட்டுகளும், தலா 100 கிலோ வீதம் 300 கிலோ ரேஷன் அரிசியும் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மூன்று மொபட்டுகள் தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. பொள்ளாச்சி நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில், ரேஷன் அரிசி ஒப்படைக்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us