Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாணவர் மன்றம் துவக்கம்

மாணவர் மன்றம் துவக்கம்

மாணவர் மன்றம் துவக்கம்

மாணவர் மன்றம் துவக்கம்

ADDED : ஜூலை 14, 2011 12:23 AM


Google News

புதுச்சேரி: புதுச்சேரி பொறியியல் கல்லூரி தகவல் தொழில்நுட்பத் துறையின் மாணவர் மன்றம் துவக்க விழா கல்லூரி ஆய்வரங்கத்தில் நேற்று நடந்தது.கல்லூரி முதல்வர் பிரிதிவிராஜ் முன்னிலை வகித்தார்.

துறைத் தலைவர் எழிலரசன் சிறப்புரை ஆற்றினார்.அமெரிக்க ரொமெக்ஸ் நிறுவன முதன்மை மென்பொருள் பொறியாளர் வெங்கட் ஜெயராமன் தலைமை தாங்கி பேசுகையில்;கடந்த காலத்தில் இந்தியர்கள் மேலை நாடுகளுக்குச் சென்று வேலை தேடினர். தற்போது சூழல் மாறிவிட்டது.



இந்தியாவில் இருந்து கொண்டே மென்பொருள் துறையில் பன்னாட்டுத் தரத்திற்கும் சாதிக்கின்றனர். இதனை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இந்திய தகவல் தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு இந்திய வங்கி, மருத்துவம் போன்ற துறைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் கொட்டி கிடக்கின்றன என்றார். விழாவில் மாணவர் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு, 2011-12ம் கல்வி ஆண்டிற்கான மாணவர்குழு செயல்பாடுகள் குறித்து வடிவமைக்கப்பட்டது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us