ADDED : ஜூலை 23, 2011 04:02 AM
கெய்ரோ: எகிப்து நாட்டில் அதிபர் முபாராக் பதவி விலகியதை அடுத்து புதிய அரசு அமைப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில் ராணுவ தலைமை தளபதி ஹூசைன் தந்தாவி தலைமையில் சுப்ரீம் கவுன்சில் குழு பதவியேற்றதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வெளியுறவுதுறை , சுகாதாரம், தொழில் மற்றும் வர்த்தகம், விமான போக்குவரத்து துறை, ராணுவம், உயர்கல்வி , தொலை தொடர்பு, போக்குவரத்து, விவசாயம், நீர்வளத்துறை, போன்ற துறைகளுக்கான அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.உள்துறை மற்றும் நீதித்துறைகளுக்கான அமைச்சர்கள் மாற்றம் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் தொடர்ந்து அப்பதவியிலேயே நீடிப்பர் என்று பிரதமர் எஸ்ஸாம்ஷரப் தெரிவித்தார்.நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதுதான் முக்கிய பணி என்றும்மேலும் வரும் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள பார்லிமென்ட் பொது தேர்தலுக்கான சட்டதிட்டங்கள் உ,ருவாக்கபட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


