Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்காசியில் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்காசியில் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்காசியில் ஆர்ப்பாட்டம்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தென்காசியில் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூலை 26, 2011 01:34 AM


Google News

தென்காசி : தென்காசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் நலன் கருதி சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த கோரியும், சமச்சீர் கல்வியில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தென்காசி வேன் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது.நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் துரை அரசு தலைமை வகித்தார்.

மாவட்ட துணை செயலாளர் பண்பொழி செல்வம், காதர்மைதீன், வட்ட செயலாளர் சுப்பிரமணியன், நெல்லை ஜீவா, குத்புதீன், தமிழ்செல்வன், இசக்கிபாண்டியன் முன்னிலை வகித்தனர்.



தென்காசி நகர செயலாளர் சந்திரன் (எ) சமத்துவன் வரவேற்றார்.மாவட்ட செயலாளர் கார்த்திக் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாநில அமைப்பு செயலாளர் ஆற்றலரசு, தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட தலைவர் ஜெகதீஸ்வரன், மாவட்ட செலயாளர் ஜெயக்குமார், தொண்டரணி மாநில துணை செயலாளர் எழில் அமுதன், மாநில துணை செயலாளர்கள் குழந்தை வள்ளுவன், முதல்வன் சிறப்புரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் தென்காசி சுடலை, செங்கோட்டை செல்லத்துரை, கீழப்பாவூர் பாக்கியராஜ், கடையம் ஆதித்தமிழன், அம்பை சுரேஷ், ராதாபுரம் சுந்தரம், வள்ளியூர் ராஜ்குமார், மானூர் வெங்கடேஷ், களக்காடு சுந்தர், ஆலங்குளம் ஆறுமுகச்சாமி, சுரண்டை திருமலைக்குமார், மைக்கேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.திருமலைக்குமார் நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us