/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/ஸ்ரீவைகுண்டம் அணைகட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வுஸ்ரீவைகுண்டம் அணைகட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு
ஸ்ரீவைகுண்டம் அணைகட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு
ஸ்ரீவைகுண்டம் அணைகட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு
ஸ்ரீவைகுண்டம் அணைகட்டில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு
ஸ்ரீவைகுண்டம் : தமிழக முதல்அமைச்சர் ஜெயலலிதா உத்தரவுபடி தாமிரபரணி பாசன அணைக்கட்டுக்களை பொதுப் பணித் துறை அமைச்சர் பார்வையிட்டார்.
ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுப்பகுதியில் ஆக்கிரமித்துள்ள அமலைச் செடிகளையும் பார்வையிட்டார். வடகால் வாய்க்காலை பார்வை யிட்டபோது, வடகால் வாய்க்கால் தடுப்புச் சுவர்கள் உடைந்து கிடப்பதையும், மதகு பகுதியில் மணல் மேடுகள் ஆக்கிரமித்திருப்பதையும் பார்வையி ட்டார். மீண்டும் 10 நாட்கள் கழித்து வருவேன் அப்போது இவைகள் அனைத்தும் சரிசெய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அதிகாரிகளை எச்சரித் தார். வடகால் வாய்க்காலில் 20 எம்.ஜி.டி. திட்டத்தில் தண்ணீர் எடுக்கப்பட்டு தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு ராட்ஷச இயந்திரங்கள் மூலம் வடகால் வாய்க்கால் மூலம் எடுக்கப்பட்டு வந்த 20 எம்.ஜி.டி. தண்ணீரை எடுத்துச் செல்வதற்கான சோதனை ஓட்டத்தை நடத்தி வருகின்றனர்.
அந்த திட்டம் செயல்படுத்தப் பட்டால், தாமிரபரணி அணைக்கட்டு, வடகால், தென்கால் பகுதியில் 25 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். ராட்ஷச இயந்திரங்கள் மூலம் தண்ணீர் எடுப்பதால், அணைக் கட்டுப்பகுதியில் தண்ணீர் வரத்து மிகவும் குறைவாக உள்ளது. எனவே அந்த திட்டத்தை கைவிட்டு வழக்கம் போல் வடகால் வாய்க்கால் மூலம் 20 எம்.ஜி.டி. தண்ணீர் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாமிரபரணி வடிநில கோட்ட திட்டக்குழு தலைவர் உதயசூரியன் அமைச்சரிடம் கூறினார். அப்போது விவசாயிகளிடம், தொழிற் சாலைகளின் நலனை விட விவசாயி களின் நலனையே பெரிதாக நினைப் பவர் ஜெயலலிதா, எனவே விவசாயி களின் கோரிக்கைகள் அனைத்தும் ஜெய லலிதா ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் கூறினார். பொதுப்பணித்துறை அமைச்சர் ராமலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா என்னை அழைத்து, தாமிரபரணி பாசனத்தில் பல்வேறு குறைகள் உள்ளதாக, விவசாயிகளிடமிருந்து பல புகார்கள் வந்துள்ளது.
எனவே தாமிரபரணி பாசன அணைக்கட்டு மற்றும் பாசன பகுதிகளை பார்வையிட்டு, அப்பகுதி விவசாயிகளின் குறைகளை கேட்டு வாருங்கள் என்று என்னை அனுப்பி யுள்ளார். ஜெயலலிதா உத்தரவு படி தாமிரபரணி பாசன கன்னடியன் அணைக் கட்டுப்பகுதியில் இருந்து கடைசி அணைக்கட்டான ஸ்ரீவை குண்டம் அணைக்கட்டுப் பகுதிவரை பார்வையிட்டுள்ளேன். கன்னடியன் அணைக்கட்டில் இருந்து தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது. எனவே இப்பகுதி விவசாயத்துக்கு தண்ணீர் விரைவில் வந்து சேரும். அணைக்கட்டில் பழுதாகி யுள்ள மதகுகள், ஆற்றில் ஆக்கிரமித்துள்ள அமலைச்செடிகள், ஆற்றை தூர்வாருவது மற்றும் விவசாயிகள் கொடுத்துள்ள கோரிக்கை மனுக்கள் அனைத்தும் அறிக்கையாக தயாரிக்கப்பட்டு, தமிழக முதல்வரிடம் சமர்ப்பிக்கப்படும். இவ்வாறு கூறினார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை இஞ்சினியர் சம்பத்குமார், கண் காணிப்பு பொறியாளர் பாஸ்கர் ராஜ், செயற்பொறியாளர் காமராஜ், பிரிவு அலுவலர்கள் ரகுநாதன், வினோத்குமார், தாமிரபரணி பாசன வடிநில கோட்ட திட்டக்குழு தலைவர் உதயசூரியன், தமிழ்நாடு விவசாய சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர்ர் வெங்கடாசாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


