Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/வேலூர்/முத்துமாரியம்மன் கோவில் 50ம் ஆண்டு பொன்விழா

முத்துமாரியம்மன் கோவில் 50ம் ஆண்டு பொன்விழா

முத்துமாரியம்மன் கோவில் 50ம் ஆண்டு பொன்விழா

முத்துமாரியம்மன் கோவில் 50ம் ஆண்டு பொன்விழா

ADDED : ஆக 27, 2011 11:37 PM


Google News

திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் டவுன் போலீஸ் லைன் முத்துமாரியம்மன் கோவில், 50ம் ஆண்டு திருவிழா, 30ம் தேதி இரவு 8 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

திருப்பத்தூர் டி.எஸ்.பி., நடராஜன் தலைமை வகிக்கிறார். 30ம் தேதியன்று கணபதி பூஜை, கொடியேற்றம், காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியும், 31ம் தேதி முதல் 4ம் தேதி வரை அம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடக்கிறது. 7ம் தேதி காலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், மாலை 5 மணிக்கு அலங்கார புஷ்ப விமானத்தில் அம்மன் விநாயகர், முருகர் உற்சவமூர்த்திகள் திருவீதி உலாவும் நடக்கிறது. இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், வெங்கடாஜலம், நாகராஜன், சாந்தலிங்கம் மற்றும் எஸ்.ஐ.,க்கள் பழனி, அன்பரசி, லட்சுமி, வீரமணி, லூர்துஜெயராஜ், சரோஜினி, ஜெயலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us