Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/பைக் திருடிய மாணவன் கைது

பைக் திருடிய மாணவன் கைது

பைக் திருடிய மாணவன் கைது

பைக் திருடிய மாணவன் கைது

ADDED : செப் 04, 2011 09:37 PM


Google News

திருத்தணி : பைக் திருடிய பிளஸ் 1 மாணவனை போலீசார் கைது செய்தனர்.

திருத்தணி ரயில்வே குடியிருப்பில் வசித்து வருபவர் சுரேஷ்பாபு, 24. இவர் வீட்டின் முன்பு நேற்று முன்தினம் பைக்கை விட்டு சென்றார். அப்போது, ஒருவர் கள்ளச் சாவியை போட்டு பைக்கை ஸ்டார்ட் செய்ய முயன்றார். சுரேஷ்பாபு ஓடி வந்து அவரை பிடித்து, திருத்தணி போலீசில் ஒப்படைத்தார். அவருடன் நின்றிருந்த மற்றொரு வாலிபர் பார்த்திபன்,23, தப்பியோடினார்.

பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியதில், சோ ளிங்கர் கிழக்கு பஜார் தெருவைச் சேர்ந்த பாலாஜி, 16, என்பது தெரிய வந்தது. சோளிங்கர் பகுதியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். அவரிடம் இரு பைக்குகளை பறிமுதல் செய்த போலீசார், மாணவன் பாலாஜியை கைது செய்தனர். தப்பி ஓடிய பார்த்திபனை போலீசார் தேடி வருகின்றனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us