/உள்ளூர் செய்திகள்/திருவள்ளூர்/இடிந்து விழும் நிலையில் இருளர் இன வீடுகள் 35 ஆண்டுகளாக பராமரிக்காமல் இருக்கும் அவலம்இடிந்து விழும் நிலையில் இருளர் இன வீடுகள் 35 ஆண்டுகளாக பராமரிக்காமல் இருக்கும் அவலம்
இடிந்து விழும் நிலையில் இருளர் இன வீடுகள் 35 ஆண்டுகளாக பராமரிக்காமல் இருக்கும் அவலம்
இடிந்து விழும் நிலையில் இருளர் இன வீடுகள் 35 ஆண்டுகளாக பராமரிக்காமல் இருக்கும் அவலம்
இடிந்து விழும் நிலையில் இருளர் இன வீடுகள் 35 ஆண்டுகளாக பராமரிக்காமல் இருக்கும் அவலம்
ADDED : செப் 04, 2011 09:37 PM
திருவள்ளூர் : பட்டரைப்பெரும்புதூர் கிராமத்தில், 35 ஆண்டுகளுக்கு முன், இருளர் இன மக்களுக்கு, கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுகள், முறையான பராமரிப்பில்லாததால், இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பட்டரைப்பெரும்புதூர் கிராமத்தில் இருளர் காலனி உள்ளது. இங்கு சுமார் 30 வீடுகள் உள்ளன. இதில் சுமார், 40 குடும்பங்களைச் சேர்ந்த, 150க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கூலி வேலை செய்து வரும் இவர்கள், சுமார் 35 ஆண்டுகளாக இப்பகுதியில் வசித்து வருகின்றனர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சிக் காலத்தில் இவர்களுக்கு, 22 தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டன. இவ்வீடுகள் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால், மிகவும் மோசமான நிலையில், இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால், இவ்வீடுகளில் வசிப்பவர்கள் எந்நேரமும் உயிர் பயத்துடனே வசித்து வருகின்றனர். இந்த வீடுகள் பழுதடைந்தது குறித்து, பலமுறை கிராம சபைக் கூட்டங்களிலும், கலெக்டர் அலுவலகத்திலும் முறையிட்டு மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், குடும்பங்கள் பெருகி வருவதால் இந்த இடத்தில், சுமார் 10 குடும்பங்கள் வீடுகள் இல்லாமல் வசித்து வருகின்றன. தாங்கள் குடியிருக்கும் வீடுகளை சீர் செய்யக்கோரி இவர்கள் திருவள்ளூர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, பூண்டி ஒன்றிய பி.டி.ஒ., சத்தியசங்கரியிடம் கேட்டதற்கு, 'இருளர் இன மக்கள் குடியிருக்கும் வீடுகள் சேதமடைந்தால் அவற்றை சரி செய்ய, முன்னுரிமை அளிக்கும்படி மாவட்ட நிர்வாகம் எங்களை அறிவுறுத்தியுள்ளது. பட்டரைப்பெரும்புதூரில் உள்ள, இருளர் இன குடியிருப்புகளின் நிலைக் குறித்து, எங்கள் துறை பொறியாளரை அனுப்பி, உடனடியாக ஆய்வு மேற்கொள்கிறேன். மேலும், எந்தத் திட்டத்தின் கீழ் இந்த வீடுகளை சீரமைப்பது என்பது குறித்து, துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து விரைவில் அந்த வீடுகள் சீரமைக்கப்படும்,'' என்றார்.


