/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ரூ.1,400 கோடி நில அபகரிப்பு புகார்: மேலும் 85 பேர் கைதாகும் வாய்ப்புரூ.1,400 கோடி நில அபகரிப்பு புகார்: மேலும் 85 பேர் கைதாகும் வாய்ப்பு
ரூ.1,400 கோடி நில அபகரிப்பு புகார்: மேலும் 85 பேர் கைதாகும் வாய்ப்பு
ரூ.1,400 கோடி நில அபகரிப்பு புகார்: மேலும் 85 பேர் கைதாகும் வாய்ப்பு
ரூ.1,400 கோடி நில அபகரிப்பு புகார்: மேலும் 85 பேர் கைதாகும் வாய்ப்பு
ADDED : செப் 04, 2011 11:40 PM
கோவை : உள்ளாட்சி தேர்தலுக்குள் நில அபகரிப்பு புகாரில் சிக்கியுள்ள 85
பிரமுகர்களை விரைவில் கைது செய்ய மேற்கு மண்டல போலீசார் நடவடிக்கை
மேற்கொண்டுள்ளனர்.தி.மு.க.,ஆட்சி காலத்தில்'செல்வாக்கை' பயன்படுத்தி பல
ஆயிரம் ஏக்கர் நிலங்களை கட்சி பிரமுகர்கள் அபகரித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரைத் துடைத்து, நிலத்தை மீட்டுத்தரும்
நடவடிக்கையாக தமிழக அரசு நில அபகரிப்பு புகார்களை விசாரிக்க தனிப்பிரிவை
ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உதவி கமிஷனர்(டி.எஸ்.பி.,)
ஒருவர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள தனிப்பிரிவு, பாதிக்கப்பட்டவர்கள் தரும்
புகாரை விசாரித்து, நில அபகரிப்பு புகார் அடிப்படையில் கைது செய்யும்
நடவடிக்கை தமிழகம் முழுவதும் நடக்கிறது. தமிழக மேற்கு மண்டலத்தில், கோவை,
நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல்,சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி
ஆகிய எட்டு மாவட்டங்களில் நில அபகரிப்பு புகார்கள் நாளுக்கு நாள்
அதிகரித்துள்ளது. 2011, மே 1 முதல் செப்.,1 வரையிலான ஐந்து மாதங்களில்
4,544 புகார்கள் ஏற்கப்பட்டுள்ளன. முதல் கட்ட விசாரணைக்குப் பின் 168
புகார்கள் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 162 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேற்கு மண்டல அளவில், மொத்தமாக புகார் மற்றும் வழக்குப்பதிவு மூலம் 10
ஆயிரத்து 163 ஏக்கர் நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவற்றின் மதிப்பு 1,400 கோடி ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது. தற்போதைய
நிலவரப்படி, நில அபகரிப்பு வழக்கு விசாரணையில் 147 பேர் கைது செய்யப்பட்டு,
162 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதுபோலீசாரின்
நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இன்னும் பல ஆயிரம் ஏக்கர்
நிலங்கள் மீட்கப்பட வேண்டியுள்ளது. இதனால், மேற்கு மண்டலத்தில் கட்சி
பிரமுகர்கள் 85 பேர் கைது செய்யப்பட வேண்டிய பட்டியலில் உள்ளனர். நில
அபகரிப்பு புகாரில் சிக்கியுள்ள இவர்கள், அடுத்த மாதம் நடக்கவுள்ள
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக கைது செய்யப்படுவார்கள் என போலீஸ் வட்டாரம்
கூறுகிறது.


