மகளிர் கல்லூரியில் மூலிகைத் தோட்டம்
மகளிர் கல்லூரியில் மூலிகைத் தோட்டம்
மகளிர் கல்லூரியில் மூலிகைத் தோட்டம்
ADDED : செப் 06, 2011 10:11 PM
கடலூர் : கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மூலிகைத் தோட்டத்தை கலெக்டர் திறந்து வைத்தார்.
கல்லூரியில் என்.எஸ்.எஸ்., மாணவிகள் மூலிகைத் தோட்டம் அமைத்துள்ளனர். இதனை கலெக்டர் அமுதவல்லி திறந்து வைத்தார். பின்னர் பழத் தோட்டம் அமைக்கும் பணியை பலா மரக்கன்று நட்டு துவக்கி வைத்து மாணவிகளைப் பாராட்டினார். ஏற்பாடுகளை கல்லூரி முதல்வர் மல்லிகா, என்.எஸ்.எஸ்., அலுவலர்கள் மற்றும் மாணவிகள் செய்திருந்தனர்.


