Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கடலூர் தாலுகா அலுவலகத்தில் பாழாகி வரும் மரக்கன்றுகள்

கடலூர் தாலுகா அலுவலகத்தில் பாழாகி வரும் மரக்கன்றுகள்

கடலூர் தாலுகா அலுவலகத்தில் பாழாகி வரும் மரக்கன்றுகள்

கடலூர் தாலுகா அலுவலகத்தில் பாழாகி வரும் மரக்கன்றுகள்

ADDED : செப் 06, 2011 10:24 PM


Google News

கடலூர் : அரசு சார்பில் வழங்கப்பட்ட மரக்கன்றுகள் முறையாக வழங்கப்படாததால் கடலூர் தாலுகா அலுவலத்தில் பாழாகி வருகிறது.

கடலூர் மாவட்டத்தில் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மரக்கன்றுகளை பெற்று மாவட்டத்தில் அனைத்து துறைகளுக்கும் 10 ஆயிரம் மரக்கன்றுகள் வீதம் 2 லட்சம் மரக்கன்றுகளை மாவட்டம் முழுவதும் நடுவதற்கு கலெக்டர் அமுதவல்லி நடவடிக்கை எடுத்தார். அதன்படி பொதுப்பணித் துறையினர் வாய்க்கால், ஏரி, குளக்கரைகளிலும், வருவாய்த் துறை அலுவலங்களிலும், கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளிலும், வட்டார வளர்ச்சித் துறையில் ஒவ்வொரு கிராம ஊராட்களிலும் என 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்காக தொண்டு நிறுவனங்கள் இதுவரை 1.50 லட்சம் மரக்கன்றுகளை வழங்கியுள்ளனர்.



தற்போது அனைத்து ஊராட்சிகளிலும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டு நடப்பட்டுள்ளது. ஆனால், கடலூர் தாலுகா அலுவலத்திற்கு வழங்கப்பட்ட மரக்கன்றுகள் முறையாக பொதுமக்களிடம் வழங்கப்படவில்லை. அரசு இலவசமாக வழங்கிய மரக்கன்றுகளை முறையாக நடாமலும், பொதுமக்களிடம் வழங்காததாலும் நல்ல நோக்கத்திற்காக பெறப்பட்ட மரக்கன்றுகள் கேட்பாற்று பாழாகி வருகிறது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us