/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/பார்த்தீனிய நச்சுச்செடி அழிப்பு முகாம்பார்த்தீனிய நச்சுச்செடி அழிப்பு முகாம்
பார்த்தீனிய நச்சுச்செடி அழிப்பு முகாம்
பார்த்தீனிய நச்சுச்செடி அழிப்பு முகாம்
பார்த்தீனிய நச்சுச்செடி அழிப்பு முகாம்
ADDED : செப் 07, 2011 02:35 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் எஸ்.என்.எம்., நகரில் பார்த்தீனியம் நச்சுக்களை
செடிகள் அழிப்பு முகாம் கலெக்டர் பாஸ்கரன் தலைமையில் நடந்தது.
பொதுமக்கள்
வசிப்பிடங்களில் உருவாகியுள்ள பார்த்தீனியம் செடிகளுக்கு மருந்து தெளித்து,
பார்த்தீனியம் செடிகளை கட்டுப்படுத்தும் முகாமை கலெக்டர் பாஸ்கரன் தொடங்கி
வைத்து பேசியதாவது: தமிழக முதல்வர் பார்த்தீனியம் எனும் நச்சுத்தன்மையுடைய
களைச்செடிகளை தமிழகத்தில் முழுமையாக அழிக்க உத்தரவிட்டுள்ளார். அதன்படி
தஞ்சாவூர் மாவட்டத்தில் 47 ஹெக்டேர் பரப்பளவு இடங்களிள் உள்ள பார்த்தீனிய
செடிகளை அகற்றுவதுக்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. விவசாய சாகுபடி
நிலங்களில் இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் மட்டுமே காணப்படுகிற இந்த
பார்த்தீனிய செடிகளை முழுமையாக கட்டுப்படுத்த இரண்டு விழுக்காடு
உப்புக்கரைசல மருந்து தெளித்து கட்டுப்படுத்தும் முகாம் நடக்கிறது. அனைத்து
இடங்களிலும் பார்த்தீவிய செடிகளை கண்காணித்து முற்றிலுமாக அழித்திட
வேண்டும். இவ்வாறு கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்தார். வேளாண் இணை இயக்குனர்
பாலசுப்பிரமணியன், துணை இயக்குனர்கள் ராஜ்குமார் (மாநில திட்டம்), ராமதாஸ்
(மத்திய திட்டம்), வேளாண் உதவி இயக்குனர் ஜேசன் நரேஷ் சுந்தரபாண்டியன்
உட்பட பலர் கலந்து கொண்டனர்.


