/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மாற்றுத்திறனாளிகள் செயற்கை உறுப்புகள் பெற விண்ணப்பிக்க அழைப்புமாற்றுத்திறனாளிகள் செயற்கை உறுப்புகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு
மாற்றுத்திறனாளிகள் செயற்கை உறுப்புகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு
மாற்றுத்திறனாளிகள் செயற்கை உறுப்புகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு
மாற்றுத்திறனாளிகள் செயற்கை உறுப்புகள் பெற விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : செப் 07, 2011 02:41 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகள், நவீன வகை
செயற்கை உறுப்புகளை இலவசமாக பெற, விண்ணப்பங்களை அளிக்கலாம், என்று
கலெக்டர் மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: முட்டிக்கு
கீழ் கைகளை இழந்த மற்றும் முட்டிக்கு கீழ் மற்றும் மேல் கால்களை இழந்த
கல்வி பயிலும் மாற்றுதிறனாளிகளுக்கும், முட்டிக்கு கீழ் கால் இழந்த
பணிபுரியும் அல்லது சுயதொழில் புரியும் மாற்றுத்திறனாளிகளுக்கும் நவீன வகை
செயற்கை உறுப்புகள் மற்றும் நவீன வகை செயற்கை கால்கள் மாவட்ட மாற்று
திறனாளிகள் நல அலுவலகங்கள் மூலம் இலவசமாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முட்டிக்கு கீழ் கைகளை இழந்த மற்றும்
முட்டிக்கு கீழ் மற்றும் மேல் கால்களை இழந்த கல்வி பயிலும்
மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன கை செயற்கை உறுப்புகள் மற்றும் முட்டிக்கு
கீழ் கால் இழந்த பணிபுரியும் அல்லது சுய தொழில் புரியும்
மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன வகை செயற்கை கால்கள் மாவட்ட மாற்று திறனாளிகள்
நல அலுவலகம் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. நவீன வகை செயற்கை உறுப்புகள்
தேவைப்படும் மாணவ மாணவியர் விண்ணப்பத்துடன், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய
அடையாள அட்டை நகல் மற்றும் பள்ளி, கல்லூரி முதல்வரிடமிருந்து சான்று
பெற்றும், பணிபுரியும் அல்லது சுய தொழில் புரியும் மாற்றுத்திறனாளிகள் நவீன
செயற்கை கால்கள் பெற விண்ணப்பத்துடன் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய
அடையாள அட்டை நகல் மற்றும் பணிபுரியும் நிறுவனத்திலிருந்து சான்று பெற்று
விண்ணப்பிக்க வேண்டும். தகுதியான மாற்று திறனாளிகள் உடனடியாக விண்ணப்பித்து
பயன்பெறலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


