/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சுயதொழில் பயிற்சி மையம் நடத்தி மோசடி சுருட்டலில் புதுவிதம்; போலீஸ் விசாரணைசுயதொழில் பயிற்சி மையம் நடத்தி மோசடி சுருட்டலில் புதுவிதம்; போலீஸ் விசாரணை
சுயதொழில் பயிற்சி மையம் நடத்தி மோசடி சுருட்டலில் புதுவிதம்; போலீஸ் விசாரணை
சுயதொழில் பயிற்சி மையம் நடத்தி மோசடி சுருட்டலில் புதுவிதம்; போலீஸ் விசாரணை
சுயதொழில் பயிற்சி மையம் நடத்தி மோசடி சுருட்டலில் புதுவிதம்; போலீஸ் விசாரணை
கோவை : 'வீட்டிலிருந்தபடியே சுயதொழிலாக மெழுகுவர்த்தி தயாரித்து, மாதம் 30 ஆயிரம் ரூபாய் வரை கை
சுரேஷ்பாபுவிடம் பணத்தை பறிகொடுத்த திருப்பூர், வஞ்சிபாளையத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம்(60) கூறியதாவது:பணி ஓய்வு பெற்று வீட்டிலிருந்த நான், 'சும்மா இருக்கும் நேரத்தில் சுயதொழில் செய்யலாமே' என்ற ஆவலில் சுரேஷ்பாபுவை அணுகினேன். அதிகளவில் மெழுகுவர்த்தி தயாரிக்க ஆர்டர் தருவதாக கூறிய அந்நபர் என்னிடம் 50 ஆயிரம் ரூபாயை 'டிபாசிட்டாக' பெற்றார். மெழுகுவர்த்தி தயாரிப்பதற்கான 'டையிங் மெஷினை'யும் வழங்கினார். ஒருமாதமே ஆன நிலையில் அந்நபர் மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிவிட்டார். 'சுயமாக உழைத்து முன்னேற வேண்டும்' என்ற முனைப்பில்தான் மெழுகுவர்த்தி தயாரிப்பு தொழிலில் இறங்கினோம். இப்போது முதலீட்டுப் பணத்தையும் பறிகொடுத்துவிட்டு நிற்கிறோம்.இவ்வாறு, ஆறுமுகம் தெரிவித்தார்.கோவை நகரைச் சேர்ந்த தண்டபாணி (59) கூறியதாவது:நான், டெக்ஸ்டூல் நிறுவனத்தில் பணியாற்றி வந்தேன். நிறுவனம் மூடப்பட்டபின் குடும்ப வருமானத்துக்கு வழி இல்லாமல் சுயமாக தொழில் துவங்க சுரேஷ்பாபுவை அணுகினேன். அந்நபர் என்னிடம் 20 ஆயிரம் வரை வசூலித்து மோசடி செய்துவிட்டார். உடைந்து, சேதமான மெழுகுவர்த்திகளை எங்களுக்கு கொடுத்து, அதை வீட்டு பாத்திரத்தில் போட்டு உருக்கி, டையிங் மெஷினில் ஊற்றி மெழுகுவர்த்தி தயாரிக்குமாறு கூறினார். நான் ஓரிரு முறை தயாரித்து கொடுத்த மெழுகுவர்த்திகளை விலைக்கு வாங்கிக்கொண்டார். அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாக கூறினார். ஒருமுறை கூடுதலாக ஆர்டர் தருமாறு கேட்டபோது, இன்னும் சில நாட்களில் வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்அதிகளவில் கிடைக்கும் என்றும், அதுவரை காத்திருக்குமாறும் கூறினார். அவரது பேச்சை நம்பி மோசம் போய்விட்டோம்.இவ்வாறு, தண்டபாணி தெரிவித்தார்.


