/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காரில் இருந்த ரூ. 1.5 லட்சம் திருட்டுகாரில் இருந்த ரூ. 1.5 லட்சம் திருட்டு
காரில் இருந்த ரூ. 1.5 லட்சம் திருட்டு
காரில் இருந்த ரூ. 1.5 லட்சம் திருட்டு
காரில் இருந்த ரூ. 1.5 லட்சம் திருட்டு
ADDED : ஜூலை 13, 2011 10:14 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் கார் கண்ணாடியை உடைத்து 1.5 லட்சம் ரூபாயை
திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பொள்ளாச்சி அடுத்த
தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் முருகேசன்(46). பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில்
ஒப்பந்தப்பணிகளை டெண்டர் எடுத்துள்ள முருகேசன், ஸ்டேட் பாங்கில் 1.5 லட்சம்
ரூபாய் பணத்தை எடுத்துள்ளார்.ஒன்றிய அலுவலகம் முன்பாக காரில் பணத்தை
வைத்து, காரை பூட்டியுள்ளார். ஒன்றிய அலுவலகத்தில் பணிகள் தொடர்பாக
விசாரிக்க சென்றுள்ளார். திரும்பி வந்தபோது, கார் கண்ணாடி உடைக்கப்பட்டு
1.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுபற்றி பொள்ளாச்சி கிழக்கு
போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து
வருகின்றனர்.


