அல்குவைதா இரண்டாம் கட்ட தலைவர் மரணம்
அல்குவைதா இரண்டாம் கட்ட தலைவர் மரணம்
அல்குவைதா இரண்டாம் கட்ட தலைவர் மரணம்
ADDED : ஆக 28, 2011 05:16 AM
வாஷிங்டன்: அல்குவைதா அமைப்பின் இரண்டாம் கட்ட தலைவரான அதியா அப்த் அல் ரகுமான் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த மே மாதம் பாகிஸ் தானில் அல்குவைதா அமைப்பின் தலைவர் பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு அவ்வமைப் பின் தலைவராக பதவி ஏற்றார் அல் ரகுமான் என்பவர்.லிபியாவை சேர்ந்த இவர் ஆப் கானிஸ்தானில் ரஷ்ய படைகளுக்கு எதிராக அல்குவைதா போரிட்ட காலகட்டங்களில் அல்குவைதாவில் இணைந்து பின்லேடனின் நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார்.கடந்த22-ம் தேதி ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வாஷிரிஸ்தான் மலைப் பகுதியில் பதுங்கியிருந்த போது கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இருப்பினும் கொல்லப்பட்ட விதம் குறித்து தகவல் எதுவும் வெளியிடப்பட வில்லை.


