/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/பஸ் வசதிகோரி சாலை மறியல் போக்குவரத்து கடும் பாதிப்புபஸ் வசதிகோரி சாலை மறியல் போக்குவரத்து கடும் பாதிப்பு
பஸ் வசதிகோரி சாலை மறியல் போக்குவரத்து கடும் பாதிப்பு
பஸ் வசதிகோரி சாலை மறியல் போக்குவரத்து கடும் பாதிப்பு
பஸ் வசதிகோரி சாலை மறியல் போக்குவரத்து கடும் பாதிப்பு
ADDED : செப் 13, 2011 02:01 AM
ப.வேலூர்: பஸ் வசதி ஏற்படுத்தி தரக்கோரி, கிராம மக்கள் சாலை மறியல்
போராட்டத்தில் ஈடுபட்டதால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
மோகனூர்
அருகே குன்னிபாளையம் கிராமம் உள்ளது. அந்த கிராமத்துக்கு சரிவர பஸ்
போக்குவரத்து வசதி இல்லாததால், மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வந்தனர்.
அதுகுறித்து, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும், எவ்வித
நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அதையடுத்து, நேற்று காலை 8.30 மணியளவில்,
குன்னிபாளையத்தில், மோகனூர்-ப.வேலூர் சாலையில், நூற்றுக்கும் மேற்பட்ட
மக்கள், மாணவ, மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால், சாலையின் இரு
புறங்களிலும் வாகனப் போக்குவரத்து முற்றிலம் ஸ்தம்பித்தது. தகவல் அறிந்த
மோகனூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்ட
மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதையடுத்து, 9.30 மணியளவில் மக்கள்
சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் மோகனூர்-ப.வேலூர்
சாலையில், ஒருமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.


